கொஞ்ச நாளாக மக்கள் உரிமை பத்திரிக்கையில் வந்துகொண்டிருந்த என் நபிமொழிக்கவிதைகளை அவ்வப்போது பதிவிட முடியவில்லை. இப்போது கூகுள் பக்கம் மூலமாக உங்களோடு இங்கே. படித்துவிட்டு எழுதுங்கள்: 193 உடம்பு முடியாதவரை உண்ணுங்கள் என்று சொல்லி வற்புறுத்தாதீர்கள் குடியுங்கள் என்று சொல்லி கட்டாயப்படுத்தாதீர்கள் அருந்தவும் உண்ணவும் அவருக்கு அல்லாஹ்விடமிருந்து வரும் என்று அண்ணல் நபிகள் சொன்னார்கள் (இப்னு மாஜா. உக்பா பின் அமீர் அல் ஜுஹானி: 04 – 3444) 194 தேனும் திருமறையும் தித்திக்கும் எப்போதும் நிவாரணங்கள் …
நபிமொழிகளின் உளவியல் — 9 & 10
ஈமானும் அசுத்தமும் மதினாவின் ஒரு தெரு வழியாகப் பெருமானார் வந்துகொண்டிருந்தார்கள். அப்போது நபித்தோழர் அபூ ஹுரைரா அவர்களும் அவ்வழியாக வந்துகொண்டிருந்தார். ஆனால் பெருமானார் தன்னைப் பார்க்காதவாறு அவர் வேறு வழியாகச் சென்றுவிட்டார். ஏன்? ஏனெனில் அவர் மனைவியோடு கூடிவிட்டு குளித்துச் சுத்தமடையாமல் இருந்தார். அந்த நிலையை அரபியில் ’ஜுனூப்’ நிலை என்று கூறுகிறார்கள். அந்த நிலையில் பெருமானாரைச் சந்திக்க அவர் விரும்பவில்லை. திரும்பி வந்தபோது அவரைப் பார்த்துப் பெருமானார் கேட்டார்கள், ‘ஓ அபூ ஹுரைரா, எங்கிருந்தீர்கள்?’. ’நான் …