நண்பர் இறையன்பு அவர்கள் நேற்று (25.06.22) எனக்கு தன் இரண்டு புத்தகங்களை அனுப்பி வைத்தார். ’நன்மதிப்புகளுடன்’ என்று எழுதி, தேதியிட்ட அச்சடித்தமாதிரியான கையெழுத்துடன். அவர் 22ம் தேதி அனுப்பியது எனக்கு நேற்றுதான் கிடைத்தது. சத்சங்கம்தென்கிழக்குத் தென்றல் முதல் நூல் 159 பக்கங்கள். இரண்டாவது நூல் முன்னதை மாதிரி மூன்று மடங்கு பெரியது! நேற்று இரவு முன்னதைப் படிக்கத் தொடங்கி சற்று நேரத்துக்கு முன்புதான் முடித்தேன். தமிழ் நூலாக இருந்தால் ஒரு நாளைக்கு 100 பக்கங்கள் எளிதாகப் …