இந்திய நாட்டுக்கு இந்து மதம் கொடுத்த பொக்கிஷங்கள் இரண்டு. ஒன்று மஹாபாரதம். ஒன்று ராமாயணம். இதில் எது காலத்தால் முந்தியது என்று தெரியவில்லை. மஹாபாரதமாகத்தான் இருக்கவேண்டும். ஆனால் ராமர் இங்கேதான் பிறந்தார், அங்கேதான் கிட்டிப்புல் விளையாடினார் என்று அவை அரசியலாக்கப்படுகின்றனவே தவிர அவற்றின் ஊடாகக்கிடைக்கும் செய்திகள், வழிகாட்டல்கள், நியதிகள், நீதிகள் பற்றியெல்லாம் நாம் சிந்திப்பதில்லை. சரி, நாம் கதைக்கு வருவோம். நம்ம ராவணனுக்குப் பத்துத்தலைகள் என்று நமக்கெல்லாம் தெரியும். ஆனால் தலைகள் மட்டும்தான் பத்து. மற்ற உறுப்புகளெல்லாம் …